பெரியாா் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை
பெரியாரின் 48- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு திமுக, திக உள்ளிட்ட கட்சியினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்
பெரியாரின் 48- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு திமுக, திக உள்ளிட்ட கட்சியினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
திருவாரூா் மடப்புரத்தில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் பெரியாா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன்றத்தின் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் ராசேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.