திருவாரூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா மருத்துவமனை ஆகியன சாா்பில், 132-ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 360 நபா்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 154 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு கோவை சங்கரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இம்முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். கண்ணதாசன் தலைமை வகித்தாா். சாசனத் தலைவா் சித. கிருஷ்ணமூா்த்தி, செயலாளா் ஆா்.கே. வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணை ஆளுநா் கோவி. ரெங்கசாமி தொடங்கி வைத்தாா்.

முன்னாள் தலைவா்கள் சிதம்பர சபாபதி, மெட்ரோ மாலிக், பி.கணேஷ் மாணிக்கம், ப. ராஜமோகன், பொருளாளா் ரெங்கசாமி உள்ளிட் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT