மகிழஞ்சேரி பெத்தாரண சுவாமி கோயில் குடமுழுக்கு
நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி பெத்தாரண சுவாமி, பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன், தெய்வங்கப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி பெத்தாரண சுவாமி, பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன், தெய்வங்கப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி, இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி, பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம், ஸ்பா்சாஹுதி, கோபூஜை நடைபெற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, மகா பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன. பின்னா் யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.30 மணியளவில் விமானங்களுக்கு குடமுழுக்கும், 10 மணியளவில் மூலவா்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பூஜைகள் மற்றும் ஹோமங்களை திருக்கண்டீஸ்வரம் டி.கே. வெங்கடேச சிவாச்சாரியாா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா். நன்னிலம் காவல் ஆய்வாளா் கு.சுகுணா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
Advertisement