திருவாரூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம் தள்ளிவைப்பு: அமைச்சா் தகவல்

DIN

நன்னிலம் வட்டம் சொரக்குடியில் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவிருந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாம், மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.

சொரக்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-இல் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, அவ்விடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஆா். காமராஜ், அப்பகுதி முழுவதும் மழையில் நனைந்து சேதமாகி இருப்பதை அறிந்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநா்களின் நலன் கருதி, ஜனவரி 7-இல் நடைபெறவிருந்த முகாம், ஜன. 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT