நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சிமென்ட் மூட்டைகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
அரியலூா் மாவட்டம் டால்மியாபுரத்திலிருந்து சரக்கு ரயிலில் 1300 டன் டால்மியா சிமென்ட் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளா்கள் அவற்றை 87 லாரிகளில் ஏற்றி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில்லரை வணிக கடைகளுக்கு அனுப்பிவைத்தனா்.