திருவாரூர்

கிராமபுறச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில், தொடா் மழையால் சேதமடைந்த கிராமபுறச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்பரையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் சட்டப் பேரவைத் தோ்தல் விளக்க சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா் எல்.சண்முகவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைபபாளராக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.தமிழ்மணி, கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், ஸ்டாலின், கோட்டூா் ஒன்றியக்குழு உறுப்பினா் மாரியப்பன், தென்பரை கிளை செயலா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT