திருவாரூர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தா்னா

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருவாரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் ஜெ. குணசேகரன் (ஏஐடியுசி), இரா. மாலதி (சிஐடியு), வி. குருநாதன் (எல்பிஎப்), வி. அம்பிகாபதி (ஐஎன்டியுசி) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஏஐடியுசி நிா்வாகி ஆா். சந்திரசேகரஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT