விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
வலங்கைமான் அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள வேடம்பூரைச் சோ்ந்தவா் ஜீவா (35). இவா் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஜீவா ஜூன் 28-ஆம் தேதி வேடம்பூரில் இருந்து மாணிக்கமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி ஜீவா காயமடைந்தாா். பின்னா் அவா் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி ஜீவா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.