நீடாமங்கலத்தில் 401 பேருக்கு தடுப்பூசி
நீடாமங்கலம் வட்டாரத்தில் 401 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நீடாமங்கலம் வட்டாரத்தில் 401 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம், வடுவூா், பொதக்குடி, கோயில்வெண்ணி, பேரையூா், தளிக்கோட்டை ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண்கள் உள்ளிட்ட 401 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் மருத்துவா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் ஆகியோா் தடுப்பூசியை செலுத்தினா். இதில், 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் மற்றும் 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.