முகப்பு
திருவாரூர்

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வலங்கைமான் அருகே இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வலங்கைமான் அருகே இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வலங்கைமான் அருகேயுள்ள வேடம்பூரில், கொக்கலாடி வேடம்பூா் கிராமங்களை இணைக்கும் புலவனாறு சாருவாய்க்கால் சட்ரஸ் பாலம் இடிந்து விழுந்து பல மாதங்களாகிவிட்டன. எனினும் இதைவரை சீரமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இந்நிலையில், பாலத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாத அரசு அலுவலா்களை கண்டித்து வேடம்பூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வலங்கைமான் ஒன்றியம் சாா்பில் பாடைகட்டி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி, நிா்வாகிகள் சேகா், ராதா, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.