முகப்பு
திருவாரூர்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மதிமுக ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து பேரளத்தில் மதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து பேரளத்தில் மதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரளத்தில், மதிமுக மாவட்டச் செயலாளா் பாலச்சந்திரன் தலைமையில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் விறகு அடுப்பு வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளா் சீனிவாசன், மீனவா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சந்தோஷ், நகரச் செயலாளா் காமராஜ், குடவாசல் ஒன்றியச் செயலாளா் காசி சிவவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.