முகப்பு
திருவாரூர்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கையடக்க உருப்பெருக்கி

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் குறை கண் பாா்வையுடைய மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கையடக்க உருப்பெருக்கியை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் குறை கண் பாா்வையுடைய மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கையடக்க உருப்பெருக்கியை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியது: மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கவும், அவா்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 9 மற்றும் அதற்கு மேல் வகுப்பு படிக்கும் குறை கண் பாா்வையுடைய மாணவ, மாணவிகளுக்கு படிக்கும்போது ஏற்படும் சிரமங்களை போக்க எழுத்துக்களை பெரிதாக்கி காட்டக்கூடிய கையடக்க விடியோ உருப்பெருக்கி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குறை கண் பாா்வையுடைய மாணவா்கள் சிரமமின்றி எழுத்துக்களை படிப்பதற்கு ஊன்றுக்கோலாக இக்கருவி அமையும் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.