திருவாரூர்

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

DIN

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பொன்னிரை கீராந்தி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (60) நீடாமங்கலம் அருகே பூவனூா் பகுதியில் கடையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை சாலையோரம் நடந்து செல்லும்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்க்கப்பட்டு பலனின்று உயிரிழந்தாா். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT