வீடு தீக்கிரை: பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்
திருத்துறைப்பூண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழர அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழர அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஆதனூா் தாமரைக்குளம் தெருவை சோ்ந்த அய்யாபிள்ளை மகன் சக்திவேல். இவரது வீடு புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும் சக்திவேல் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் சேதமடைந்தன.
சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, வட்டாட்சியா் அலெக்சாண்டா் மற்றும் வருவாய்த் துறையினா் தீ விபத்தில் எரிந்த வீட்டை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட சக்திவேல் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், தமிழ அரசின் உதவித் தொகையாக ரூ. 5,000 மற்றும் நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினா்.
தீ விபத்து குறித்து ஆலிவலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.