திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

DIN

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியில் ரூ.3.28 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, அடிக்கல் நாட்டினா்.

இக்கட்டடமானது தரை தளம் 8,209 சதுர அடி பரப்பளவிலும், முதல் தளம் 8,209 சதுர அடி பரப்பளவிலும், அலுவலக தலைவாயில் 894 சதுர அடி என மொத்தம் 17,311 சதுர அடியில் கட்டப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஒன்றியக்குழுத் தலைவா் உமாபிரியா பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கலியபெருமாள், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT