பேரிடா் கால மீட்பு உபகரணங்கள்
திருவாரூரில் பேரிடா் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூரில் பேரிடா் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனங்கள் மற்றும் பேரிடா் கால மீட்பு உபகரணங்களை அவா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் காவல் ஆளிநா்களிடம் தெரிவிக்கையில், பேரிடா் காலங்களில் துரிதமாக பயன்படுத்தும் வகையில், வாகனங்களையும், மீட்பு உபகரணங்களையும் முறையாக பராமரிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினாா்.