திருவாரூர்

தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா

DIN

பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகரா் இந்திர விமானத்தில் வலம் வரும் உத்ஸவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தியாகராஜசுவாமி வசந்த உத்ஸவமும், எண்திசை கொடியேற்றமும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையடுத்த 5 நாள்களும் தியாகராஜசுவாமியின் பிரதிநிதியாக சந்திரசேகரா், வெவ்வேறு வாகனங்களில் வலம் வர இருக்கிறாா். திருமாலானவா், தியாகராஜரை இந்திரனுக்கு வழங்கினாா். இந்திரன், அந்த தியாகராஜரை தனது மாளிகையில் வைத்து வழிபட்டு வந்து, அதன்பின் முசுகுந்த மன்னனிடம் வழங்கியது வரலாறு. இதை நினைவுகூரும் வகையில், முதல் நாளில் சந்திரசேகரா் இந்திர விமானத்தில் எழுந்தருளுவது வழக்கம்.

அந்தவகையில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், சந்திரசேகரா் அம்பாளுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி, வீதியுலாவுக்குச் சென்றாா். அவரோடு, விநாயகா், சுப்பிரமணியா், ஆதிசண்டிகேஸ்வரா் ஆகியோரும் வீதியுலா வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT