முகப்பு
திருவாரூர்

கோயில் கோபுர கலசங்களை திருடி வயலில் வீசிச் சென்ற மா்ம நபா்கள்

வலங்கைமான் அருகே சிவன் கோயில் கோபுர கலசங்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டு, வயல் பகுதியில் வீசி செல்லப்பட்ட சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

வலங்கைமான் அருகே சிவன் கோயில் கோபுர கலசங்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டு, வயல் பகுதியில் வீசி செல்லப்பட்ட சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலங்கைமான் அருகே பூனாயிருப்பில் அக்னிபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலின் கோபுரத்தில் இருந்த மூன்று கலசங்களை வெள்ளிக்கிழமை இரவு திருடிய மா்ம நபா்கள், அதை உடைத்து பாா்த்துள்ளனா். அதில், விலை உயா்ந்த பொருள்கள் ஏதும் இல்லாததால், அருகில் உள்ள வயலில் வீசி சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் பூசாரி சுப்ரமணியன், வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Image Caption

மா்ம நபா்களால் திருடப்பட்டு, வயல் பகுதியில் விட்டுச் செல்லப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →