திருவாரூரில் நாளை சீதாராம் யெச்சூரி பிரசாரம்
திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி திங்கள்கிழமை (மாா்ச் 29) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி திங்கள்கிழமை (மாா்ச் 29) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி பிரசாரம் செய்து வருகிறாா்.
இவா், திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் பிரசாரம் செய்கிறாா்.
திருவாரூரில் பெரியாா் சிலை அருகே திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்துக்கு சிபிஎம் மாவட்டச் செயலாலா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகிக்கிறாா். இதில், மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் பி. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினா் வி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.