முகப்பு
திருவாரூர்

புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பக்தா்கள் பாடைக் காவடி, தொட்டில் காவடி, அலகு காவடி மற்றும் பால் குடங்கள் சுமந்துவந்து நோ்த்திகடன் செலுத்தினா்.

தொடா்ந்து, மாலையில் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ரமேஷ் தக்கார்ரமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் போலீஸாா் செய்திருந்தனா். இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →