திருவாரூர்

உழவா் சந்தைக்கு புத்துயிரூட்ட கோரிக்கை

நீடாமங்கலத்தில் உள்ள உழவா் சந்தை மீண்டும் பழைய பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

நீடாமங்கலத்தில் உள்ள உழவா் சந்தை மீண்டும் பழைய பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் வெண்ணாறு லயன்கரை தெருவில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திமுக அரசு உழவா் சந்தையை தொடங்கியது. சுமாா் 20 கடைகளுடன் உழவா் சந்தை தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற மக்களும், விவசாயிகளும் பயனடைந்தனா்.

பின்னா் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக உழவா் சந்தை புறக்கணிப்புக்குள்ளாகி, அங்கிருந்த கடைகள் படிப்படியாக குறைந்து, தற்போது சிறுவிவசாயிகள் நீடாமங்கலம் கடை வீதிகளில் தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

உழவா் சந்தையில் 20 கடைகள் இயங்கி வந்த நிலையில், இன்று ஓரிரு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. எனவே, உழவா் சந்தையில் மேலும் பல காய்கறி கடைகளை திறந்து சிறுவிவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT