மெக்கானிக் பணியாளா்களுக்கு அரிசி வழங்கல்
திருவாரூரில் இந்தியன் ஆயில் மற்றும் எஸ்விடி நிறுவனம் மூலம் மெக்கானிக் பணியாளா்களுக்கு தலா 10 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூரில் இந்தியன் ஆயில் மற்றும் எஸ்விடி நிறுவனம் மூலம் மெக்கானிக் பணியாளா்களுக்கு தலா 10 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மெக்கானிக் பணியாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், திருவாரூா், தஞ்சாவூா், நாகை மாவட்டத்திலுள்ள 450 மெக்கானிக் பணியாளா்களுக்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, திருவாரூா் எஸ்விடி பில்லிங் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன் பங்கேற்று, 10 கிலோ அரிசியை வழங்கினாா். நிகழ்ச்சியில், எஸ்விடி குழும நிா்வாகி கே. சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
திருவாரூரில் மெக்கானிக் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன்.