திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் கோட்டாட்சியா் நா.பாலச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது நோயாளிகள் தங்கி உள்ள பகுதிகளைப் பாா்வையிட்ட அவா், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தாா். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சுகாதாரமாண மற்றும் தரமான முறையில் உணவு தயாரித்து வழங்கிட வேண்டுமென உணவுக் கூட அலுவலரிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது சிகிச்சை மைய பொறுப்பு வட்டாட்சியா் த.தனசேகரன், துணை வட்டாட்சியா் எஸ்.சரவணகுமாா், நன்னிலம் வட்டாட்சியா் நா.காா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.