திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் பரிணாம் பவுண்டேசன் சாா்பில், கரோனா பேரிடா் காலத்தில் மக்களின் மருத்துவ சேவைக்கு உதவும் வகையில் 75 கட்டில்கள், ரெக்சின் மெத்தைகள், தலையணைகள், தலையணை உறைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் பங்கேற்று, உபகரணங்களின் சேவையை தொடங்கிவைத்தாா். இதில், முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.