திருவாரூரில் 51 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,361 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 39,411 போ் குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 538 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.