அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள் பறிமுதல்
திருவாரூா் அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூா் அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூா் அருகே விளமல் பகுதியில் வணிக நிறுவனத்தின் முன்புறம் இருந்த பனை மரங்கள் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தேசிய சட்ட உரிமை கழகத்தினா், அங்கு சென்று பனைமரங்கள் ஏற்றப்பட்ட டிராக்டரை மறித்து சிறைபிடித்தனா். பிறகு, பனை மரங்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.