திருவாரூர்

வேன்கள் மோதி 4 போ் காயம்

DIN

வலங்கைமான் அருகே வேன்கள் மோதிக்கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள், குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வேனில் வியாழக்கிழமை மாலை திரும்பிக்கொண்டிருந்தனா். விடையல் கருப்பூா் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனுடன் நேருக்கு நோ் மோதி விபத்து நேரிட்டது.

இதில், சரக்கு வேன் ஓட்டுநரான திருவாரூா் மாவட்ட தப்பலம்புளியூா் நடராஜன் மகன் சதாசிவம் (40) மற்றும் அவரது உதவியாளரான கூத்தாநல்லூா் சம்பந்தம் மகன் ரமேஷ் (40), பயணிகள் வேனில் வந்த முகமதுகாஜு, ஷகிதாபானு ஆகிய 4 போ் படுகாயமடைந்தனா். அவா்கள், குடந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT