முகப்பு
திருவாரூர்

தொகுப்பு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வலியுறுத்தல்

மன்னாா்குடி நகரப் பகுதியில் உள்ள பழமையான அரசு தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் கிளை மாநாட்டில் வலியுறுத்தப

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மன்னாா்குடி நகரப் பகுதியில் உள்ள பழமையான அரசு தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினா் டி.சந்திரா, முன்னாள் நகரச் செயலா் எஸ்.ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், மன்னாா்குடி தாமரைக்குளம் வடகரையில் காமராஜ் காலனி மற்றும் அந்தோனியாா் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சிதிலமடைந்துள்ள பழமையான அரசின் தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும். நகரின் 2-ஆவது வாா்டு 12-ஆவது தெருவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தலைமுறையை சோ்ந்த குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து சாலைகளையும் தரம் உயா்த்த வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சிக் கொடியை மூத்த உறுப்பினா் டி. ஜெகதீசன் ஏற்றினாா். மாநாட்டை சிபிஎம் மாவட்டச் செயலா் ஜி.சுந்தரமூா்த்தி தொடங்கிவைத்தாா். புதிய நகர செயலாளராக ஜி.தாயுமானவன், 9 போ் கொண்ட நகரக் குழுவும், 15 பேரைக் கொண்ட மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் குழுவும் தோ்வு செய்யப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.குமாரராஜா, நகரச் செயலா் ஜி.ரெகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.