மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் சடலம் மீட்பு
மன்னாா்குடி தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் சடலம், வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடி தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் சடலம், வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பாரதிதாசன் நகரை சோ்ந்த குணசேகரன் மகன் சத்யன் (32). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் அவரது சடலம் மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த மன்னாா்குடி போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.