திருவாரூர்

வஉசி பிறந்த நாள் விழா

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சாா்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஜோதி பவுன்டேஷன் சாா்பில் அதன் நிறுவனா் ஜோதிராஜன் தலைமையில் காவிரிப்படுகை மற்றும் சாலையோரங்களில் 150 பனை விதைகள் நடப்பட்டன. இதில், மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞா் சங்க செயலாளா் கிங் ஜெ.பைசல் வ.உ.சி. வேடமணிந்து பங்கேற்றாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தலைமையில் வ.உ.சி.யின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம், நகரத் தலைவா் ராமானுஜம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் வ.உ.சி.யின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி.பாரதிகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

மயிலாடுதுறை திருவிழந்தூா் பகுதியில் பனை விதைகள் நடும் ஜோதி பவுன்டேஷன் அமைப்பினா்.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT