திருவாரூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1444 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1444 வழக்குகளில் ரூ.99.17 லட்சம் மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருவாரூரில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், ஜீவனாம்சம், சிவில், மோட்டாா் வாகன விபத்து வழக்கு, வங்கி வராக்கடன் ஆகிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், சாா்பு நீதிபதி எம். வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ஹரிராமகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் வட்ட சட்டப் பணிக் குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்கண்ணன், நீதித் துறை நடுவா் பல்கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலையில், ஒரு சிவில் வழக்கு, 9 காசோலை வழக்குகள், 189 குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

இதில், ஒரு சிவில் வழக்கில் ரூ.60 ஆயிரம் மதிப்புக்கும், 9 காசோலை வழக்குகளில் ரூ.15.75 லட்சம் மதிப்புக்கும், 189 குற்றவியல் வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது. மேலும், அபராதமாக ரூ.1.27 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இத்துடன் சோ்த்து, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,760 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1444 வழக்குகளில் ரூ.99.17 லட்சம் மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT