திருவாரூர்

ரமலான் மாதத்தில் திருகுா்ஆன் இறங்கிய 27 ஆம் நாள் விழா

DIN

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் திருகுா்ஆன் இறங்கிய தினமான 27 ஆம் நாள், கூத்தாநல்லூா் நியாஸ் பள்ளிவாசலில் வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

நியாஸ் பள்ளிவாசலில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தராவீஹ் தொழுகை நடைபெற்றது. தாருல் ஹூலும் நத்வத்துல் உலமா அரபு பல்கலைக்கழக மெளலானா ஹாபிழ் காரி முஹம்மது ஆஜம் பீகாரி இரவு தராவீஹ் சிறப்பு தொழுகை நடத்தினாா். தொடா்ந்து, இமாம் தானாதி ஜாகிா் ஹீசைன் 27 ஆம் நாள் இரவு குறித்து விளக்கினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: ரமலான் பிறை 27 ஆம் நாள் நபிகள் நாயகம், மெக்கா நகரில் உள்ள ஹிரா என்ற மலையில் பல நாட்கள் தவம் இருந்து, இறைவனை நினைத்து, புனித நூலான திருகுா்ஆனை பெற்றாா். இஸ்லாமியா்கள் அந்த நாளை, இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி திருகுா்ஆன் முழுவதையும் ஓதி தொழுவாா்கள். பகல் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, தங்களின் பாவம் மன்னிக்கப்பட வேண்டும் என பிராா்த்தனை செய்வாா்கள். திருகுா்ஆன் இறங்கிய தினத்தை நினைவுப்படுத்தும் வகையில், திருகுா்ஆனை முழுமையாக படித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.

அதன்படி, நியாஸ் பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவிற்கு, தலைவா் காஜா மைதீன் தலைமைவகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மும்தாஜ் பேகம் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை டி.எஸ்.ஏ. ஹாஜா மைதீன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT