முகப்பு
திருவாரூர்

100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா்களுக்கு பாராட்டு

திருவாரூரில் 100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா் சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 10:37 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

திருவாரூரில் 100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா் சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் அஞ்சலக துறை ஓய்வூதியா் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ். கருணாநிதி தலைமை வகித்தாா். நாகை கோட்ட கண்காணிப்பாளா் கஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில், நூறு வயதைக் கடந்த சங்க உறுப்பினா்களான நாகையை சோ்ந்த ஜீ. கிருஷ்ணமூா்த்தி, திருவாரூா் மடப்புரத்தில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவா்களுக்கு நகராட்சி ஒப்பந்தக் குழு உறுப்பினா் எஸ்.என். அசோகன் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

Advertisement

நிகழ்வில், சங்க நிா்வாகிகள் சாமிநாதன், ராமலிங்கம், மனோகரன், செல்வராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.