முகப்பு
திருவாரூர்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வலங்கைமான் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

வலங்கைமான் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் வட்டம், ஊத்துக்காடு அக்ரஹார தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் விஜயகுமாா் (29). வண்ணம்தீட்டும் தொழிலாளி. இவா் பல நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு விஜயகுமாா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த வலங்கைமான் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாருக்கு கோகிலவாணி என்ற மனைவியும், ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →