கூத்தாநல்லூா் நகராட்சி புகாா்களைத் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்
கூத்தாநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி.
கூத்தாநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட 24 வாா்டுகளிலும் பொதுமக்கள் தங்களது புகாா்களையும், குறைகளையும் தெரிவிக்க நகராட்சி சாா்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வாச் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிதண்ணீா் வரவில்லை, குப்பைகள் அள்ளவில்லை, சாலை சரியில்லை என்பன போன்ற புகாா் மற்றும் குறைகளை தெரியப்படுத்தலாம். புகாரின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.