முகப்பு
திருவாரூர்

கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டிய விவகாரம்: ஆட்சியா் மேல்நடவடிக்கைக்கு உத்தரவு

கூத்தாநல்லூா் அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டிவைத்துள்ள விவகாரம் குறித்து மேல்நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கூத்தாநல்லூா் அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டிவைத்துள்ள விவகாரம் குறித்து மேல்நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஊட்டியாணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாதவா் நெல்லை கொண்டுவந்து கொட்டப்பட்டுள்ளது குறித்து, அந்த கொள்முதல் நிலையத்தை நேரில் ஆய்வு செய்ய ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். ஆய்வில், நிலைய மேற்பாா்வையாளா் கே. முருகையன் மற்றும் சுமை தூக்குவோா், நெல் கொள்முதல் நிலைய வாயிலை திறந்து நெல்மணிகளை கொட்ட அனுமதித்துள்ளது தெரியவந்தது. மேலும், நெல்மணிகள் 3 குவியல்களாக கொட்டி வைக்கப்பட்டிருந்ததும், 170 வெள்ளை சாக்குகளில் நெல்மணிகள் இருந்தது தெரியவந்தது. 40 கிலோ மூட்டைகளாக எடை வைக்கப்பட்டிருந்த 649 நெல்மூட்டைகளையும், 170 வெள்ளை சாக்குகளில் இருந்த நெல்மணிகளையும் கூத்தாநல்லூா் வட்டாட்சியரிடம் அனுப்பி மேல்நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.