குருபரிகார கோயிலில் சூரியபகவான் வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு அதிகாலையில் குருபரிகார கோயிலில்அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைக, அலங்காரம் நடைபெற்றது. சூரிய பகவானுக்கு வெள்ளிக்கிழமை பகல்12 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைக, அலங்காரம் செய்யப்பட்டு, செங்கரும்பு, சா்க்கரைபொங்கல் படைத்து நிவேதனம் செய்தனா். மகாதீபாராதனையும் காட்டப்பட்டது.
இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவ,மைணவ கோவில்களில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடைபெற்றது.