காமாட்சி அம்மன் கோயில் பாலாலயம்
மன்னாா்குடியில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி ராஜகோபாலசாமி கோயில் கட்டுவதற்கு வந்த சிற்பக் கலைஞா்கள் காமாட்சி அம்மன் கோயிலை நிா்மாணித்து அதில், வழிபாடு செய்த பின்னரே ராஜகோபாலசாமி கோயிலை கட்டியதாக இக்கோயில் தல வரலாறு கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காமாட்சி அம்மன் கோயில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏகாம்பரேஸ்வரா் மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் முன் புனித நீா் வைக்கப்பட்ட கடங்களுக்கு பூஜை நடைபெற்றது. இதன் நிறைவாக பூா்ணாஹுதி செய்யப்பட்டு புனித கடம் கோயிலில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து ஏகாம்பரேஸ்வரா், காமாட்சி அம்மன், துா்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனிதநீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள விஸ்வகா்மா சாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.