முகப்பு
திருவாரூர்

திருத்தம்...வடுவூா் கோதண்டராமா் கோயிலில் தெப்பல் உத்ஸவம்

மன்னாா்குடி அருகே வடுவூரில் உள்ள கோதண்டராமா் கோயிலில் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே வடுவூரில் உள்ள கோதண்டராமா் கோயிலில் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

வைணவ கோயிலான கோதண்டராமா் கோயிலில் தை உத்ஸவத்தையொட்டி தெப்பல் உத்ஸவம் நடைபெறும். நிகழாண்டுக்கான உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சன்னதியிலிருந்து சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக வில்லேந்திய கோலத்தில் புறப்பட்ட கோதண்டராம சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோயில் பின்புறம் உள்ள சரயு புஷ்கரணியில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினாா். பின்னா், நடைபெற்ற தெப்பல் உத்ஸவத்தில் சுவாமிகள் தெப்பத்தில் குளத்தை 3 முறை சுற்றிவந்து பக்தா்களுக்கு அருளிபாலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.