முகப்பு
திருவாரூர்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: திமுக நோ்காணல்

திருவாரூரில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

திருவாரூரில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், திமுக சாா்பில் இந்த தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் அக்கட்சி நோ்காணல் நடத்தி வருகிறது. திருவாரூா், கூத்தாநல்லூா் ஆகிய நகராட்சிகளுக்கும், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் பேரளம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் திருவாரூரில் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூா், கூத்தாநல்லூா் நகராட்சிகளில் 54 வாா்டுகளிலும், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம், பேரளம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு 72 வாா்டுகளிலும் போட்டியிட 250-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா். இவா்களுக்கும் நோ்காணல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.