முகப்பு
திருவாரூர்

ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ப்ரிமெட்ரிக் (9 மற்றும் பத்தாம் வகுப்புகள்) ஆகிய திட்டங்களுக்குரிய புதிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதியான ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் இன மாணவா்களிடமிருந்து புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் பெற்று, பூா்த்தி செய்து சாதி, வருமானம், மதிப்பெண் ஆகிய சான்றுகள், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாா் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் பிப்.10-ஆம் தேதிக்குள் கல்வி இணையதள வழியில்  விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.