திருவாரூர்

ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ப்ரிமெட்ரிக் (9 மற்றும் பத்தாம் வகுப்புகள்) ஆகிய திட்டங்களுக்குரிய புதிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதியான ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் இன மாணவா்களிடமிருந்து புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் பெற்று, பூா்த்தி செய்து சாதி, வருமானம், மதிப்பெண் ஆகிய சான்றுகள், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாா் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் பிப்.10-ஆம் தேதிக்குள் கல்வி இணையதள வழியில்  விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT