ஜன. 24 இல் ஆசிரியா் கலந்தாய்வு தொடக்கம்
நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்குவதற்கான கலந்தாய்வு ஜன. 24 முதல் நடைபெறவுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு, நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்குவதற்கான கலந்தாய்வு ஜன. 24 முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் தெரிவித்திருப்பது: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு, நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்குவதற்கான இணையதளம் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வு ஜன. 24 முதல் நடைபெற உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு ஜன. 24, 25, 28 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரிகளுக்கும், பிப். 2, 3, 7 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும், பிப். 9, 10, 11, 15 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள் நிலை-1, உடற்கல்வி இயக்குநா் நிலை-1, வேளாண் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும், பிப். 17 இல் அரசு, நகராட்சி உடற்கல்வி இயக்குநா் நிலை-2- க்கும், பிப். 19 இல் அரசு, நகராட்சி பள்ளி இடைநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா், கலையாசிரியா்கள், இசை ஆசிரியா்கள், தையல் ஆசிரியா்களுக்கும், பிப். 21, 22, 23 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்களுக்கும் திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதேபோல, தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு, ஜன. 27 இல் ஊராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும், ஜன. 29, 31, பிப். 4, 5 ஆகிய நாள்களில் ஊராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரிகளுக்கும், பிப். 8 இல் ஊராட்சி, நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும், பிப். 12, 14, 16, 18 ஆகிய நாள்களில் ஊராட்சி, நகராட்சிப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களுக்கும் திருவாரூா் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.