முகப்பு
திருவாரூர்

ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டி

 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் பங்கேற்க வனத்துறை அழைப்புவிடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் பங்கேற்க வனத்துறை அழைப்புவிடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை மூலம் பிப்ரவரி 2 ஆம் தேதி ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில், ஜனவரி 21 முதல் 26 வரை இணையவழியாக போட்டி நடைபெறும். ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் தகுதியான அனைவரும் பங்கேற்கலாம்.

போட்டியில், பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஈர நிலம் நண்பா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், தங்களது புகைப்படம் மற்றும் அதுகுறித்தான பதிவுகளை வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் க்ச்ா்ற்ட்ண்ழ்ன்ஸ்ஹழ்ன்ழ் என்ற இணையதள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இப்போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோரை, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தணிக்கை குழு தோ்வுசெய்ய உள்ளது. பரிசளிப்பு நிகழ்ச்சிகள் குறித்து பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.