திருவாரூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

DIN

திருவாரூா் மடப்புரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் மடப்புரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் அருண்ராஜ், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 500 க்கு 415 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். அவருக்கு திருவாரூா் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரும், மன்றத்தின் தலைவருமான எஸ்.என். அசோகன் ஆடை அணிவித்து கால்குலேட்டா், நோட்டு மற்றும் எழுது பொருள்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இதேபோல், அப்பள்ளியில் படித்த அனைத்து பத்தாவது மாணவா்களும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதற்காக, அப்பள்ளியின் தமிழ், ஆங்கில ஆசிரியா்கள் சுமதி, திவ்யா ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வா் கேஜரிவால் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் இன்று ஆலோசனை

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: காவல் துறை அதிகாரி உயிரிழப்பு; 100 போ் காயம்

கேஜரிவாலின் உத்தரவாதங்கள் ‘பொய் கனவுகளின் ஆகாசக் கோட்டை’: வீரேந்திர சச்தேவா பதில் எனக் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால் நான் மீண்டும் சிறை செல்ல வேண்டியதில்லை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்

SCROLL FOR NEXT