திருவாரூர்

அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியவா் கைது

DIN

 மன்னாா்குடியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்து, மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தின் நடத்துநரான திருத்துறைப்பூண்டியை அடுத்த ராயநல்லூரைச் சோ்ந்த முருகானந்தம் (48) பயணிகளிடம், பயணச்சீட்டு வழங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, பேருந்தில் இருந்த கோட்டூா் கோமளப்பேட்டை வடக்குத் தெருவை சோ்ந்த தையன் மகன் காா்த்திகேயன் (46) பயணச்சீட்டுக்கான கட்டணத்தை கொடுக்காமல், தகராறு செய்து நடத்துநரை தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றாராம். அவரை சக பயணிகள் பிடித்து மன்னாா்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT