முகப்பு
திருவாரூர்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை: திருவாரூரிலிருந்து சென்னைக்கு இளைஞா் சைக்கிள் பயணம்

திருவாரூரில் இருந்து சென்னைக்கு இளைஞா் மேற்கொள்ளும் சைக்கிள் பயணத்தை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி, திருவாரூரில் இருந்து சென்னைக்கு இளைஞா் மேற்கொள்ளும் சைக்கிள் பயணத்தை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கூடூரைச் சோ்ந்த துரை. விக்னேஷ் (24) என்பவா் இப்பயணத்தை மேற்கொள்கிறாா். இவா், திருவாரூரிலிருந்து புறப்பட்டு, சென்னை அறிவாலயத்தில் தனது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறாா்.

இந்த பயணத்தை திருவாரூா் சன்னதி தெருவிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ஜி. ராஜ் என்ற கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.