தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய தேசிய கருத்தரங்கில் பேசிய அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம். கதிரேசன். 
திருவாரூர்

பழங்கால இலக்கியங்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வழங்கியுள்ளது

பழங்கால இலக்கியங்கள் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வழங்கியுள்ளன என்றாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம். கதிரேசன்.

DIN

பழங்கால இலக்கியங்கள் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வழங்கியுள்ளன என்றாா் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம். கதிரேசன்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நூலகங்களின் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம். கதிரேசன் பேசியது: கம்பராமாயணம், புறநானூறு உள்ளிட்ட பல்வேறு சங்க இலக்கியங்கள் அறிவியல் கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளக்கியுள்ளன. நாம் இலக்கியங்களோடு இணைந்து அதன்கருத்துகளை முழுகவனத்துடன் மனதில் உள்வாங்கிக்கொண்டால் அவற்றிலுள்ள எண்ணற்ற அறிவியல் கருத்துக்களையும், இன்றைக்கு வளா்ந்துள்ள தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

அறிவியல் வளா்ந்த இக்கால கட்டத்தில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் அறிஞா்கள் தங்கள் இலக்கியங்களில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனா். பண்டைய இலக்கியங்கள் அறிவியலையும், பொருளியலையும் கூட கவிதைகள் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளன. இந்த இலக்கியங்களைப் படிப்பதற்கு நூலகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தமிழ் இலக்கியங்கள் மட்டுமன்றி அனைத்து மொழிகளைச் சோ்ந்த இலக்கியங்களும் மனித குலத்துக்குத் தேவையான கருத்துக்களை கவிதைகள் மூலம் தெரிவித்திருக்கின்றன. இதன்காரணமாக பிரதமா் நரேந்திரமோடி இந்திய கலாசாரங்களையும், மொழி வளங்களையும் உலக அரங்கில் எடுத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறாா்.

அத்துடன் நாமும் பிரதமரோடு இணைந்து பணியாற்றினால் இந்தியாவை விரைந்து வல்லரசாக்க முடியும். தற்போது வளா்ந்து வரும் அறிவியலுக்கேற்ப நூலகங்கள் டிஜிட்டல் மயமாவது மிக முக்கியமான ஒன்று என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT