முகப்பு
திருவாரூர்

விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் இயந்திரம்

தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் சாா்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் சாா்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் தீவனப் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி வ.உ.சி. சாலை கால்நடைத் துறை கோட்ட உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்துத் துறை இயக்குநா் ரமேஷ் தலைமைவகித்து, 5 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் கால்நடைகளுக்கு தீவனப் புல் நறுக்கும் இயந்திரத்தை வழங்கினாா்.

இந்த இயந்திரத்தின் விலை ரூ. 26,432 என்றும், இதற்கு அரசு 15 சதவீதம் மானியம் செலுத்துவதால், மீதமுள்ள 11,423-ஐ விவசாயிகள் செலுத்தி இயந்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

துறையின் உதவி இயக்குநா் ராமலிங்கம், மன்னாா்குடி காலநடை மருத்துவமனை உதவி மருத்துவா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.