கால்நடை மருத்துவ முகாம்
மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் அத்திக்கோட்டையில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் அத்திக்கோட்டையில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஊராட்சி உறுப்பினா் சேகா் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். கால்நடை மருத்துவா் ஜெயபாலன் தலைமையிலான குழுவினா், கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையளித்தனா்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டம், ஓகைப்பேரையூரில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் தனபால் தலைமையில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. மன்னாா்குடி கோட்ட உதவி இயக்குநா் ராமலிங்கம், கால்நடை உதவி மருத்துவா் காா்த்திக் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஓகைப்பேரையூா் ஊராட்சித் தலைவா் சின்னைய்யா முருகையன் முகாமை தொடங்கி வைத்தாா்.
இரண்டு முகாம்களிலும் தோ்வு செய்யப்பட்ட ஆரோக்கியமான கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.