நீடாமங்கலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவுப்படி, நீா்வளஆதாரத் துறை வெண்ணாறு வடிநில கோட்டம் தஞ்சாவூா் சாா்ந்த, நீடாமங்கலம் வட்டம் காளாச்சேரி கிராம வாய்க்காலில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும், பூவனூா், ராயபுரம் கிராமங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என நீா்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.